*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

*பிரதமர் மோடி தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், விஜய காந்த்தின் நடிப்பு  பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி. *ராகுல் காந்தி இரங்கல்- சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரதுContinue Reading

சென்னை- 28. திரைப்படக் கலைஞர், அரசியல் தலைவர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட கேப்டன் விஜயகாந்த தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் சுமார் 40 ஆண்டுகள் கோலோச்சியவர், நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், விஜயகாந்த் என்ற பெயரில் 1979 -ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில்Continue Reading

*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading

செப்டம்பர்,20- மணி ரத்னம், திரை உலகில் நுழைந்த, ஆரம்ப காலத்தில் கொடுத்த சினிமாக்கள் பெரிதாக பேசப்படவில்லை , ’மவுனராகம்’ திரைப்படம் அவரை , ஓரளவுக்கு வெளி உலகுக்கு அடையா ளம் காட்டியது. நகர்ப்புறங்களி ல் அவரை தெரிந்து கொண்டார்கள். கடந்த 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தான், மணி ரத்னத்தை தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்தது. மும்பையை கதைக்களமாக கொண்டு, மணி ரத்னம் உருவாக்கிContinue Reading

செப்டம்பர்,20- முதுகுத்தண்டு உடைந்து,30 ஆண்டுகள் படுத்த படுக்கையாக கிடந்த நடிகர் ‘என் உயிர்த்தோழன்’ பாபு மரணம் கோடம்பாக்கத்தை சோகமயமாக்கியுள்ளது. அவர் பாரதிராஜாவின் வார்ப்பு. தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜை ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஹீரோ ஆக்கினாரர், பாரதிராஜா. வெள்ளிவிழா கொண்டடிய அந்த ஒரே படத்தில் உச்சம் தொட்ட பாக்யராஜ்,குருவை மிஞ்சிய வணிக சினிமாக்களை கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கலை உலக வாரிசாகவும், அவரால் அறிவிக்கப்பட்டார். இதேபோல், தன்னிடம் உதவியாளராக இருந்தContinue Reading

செப்டம்பர்,19- நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது. சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள்Continue Reading

செப்டம்பர்,16- தமிழ்த்திரை உலகில் பாரதிராஜாவை அடுத்து,ஏராளமான இயக்குநர்கள் ஷங்கரின் பட்டறையில் இருந்து வெளிப்பட்டவர்கள் தான். பாக்யராஜ், மணிவண்ணன்,மனோபாலா, கே.ரங்கராஜ், மனோஜ்குமார், பொன் வண்ணன், சீமான் உள்ளிடோர், பாரதிராஜாவின் வார்ப்புகள். வெங்கடேஷ், மாதேஷ், சிம்பு தேவன், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், ஹோசிமின்,அடலீ ஆகியோர் ஷங்கரின் மோதிரக்கையால் குட்டுப்பட்டவர்கள். எனினும் ஷங்கரை போன்று வணிக ரீதியாக, தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்தவர், அட்லீ மட்டுமே. ஷங்கரிடம் எந்திரன்,நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீ, ராஜாராணிContinue Reading

செப்டம்பர்,16- நூறு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் நடிகராக விஜய்இன்றைக்கு உச்சத்தில் இருக்கிறார்.அடுத்து அரசியலில் இறங்க காய் நகர்த்தி வருகிறார். ஆரம்ப நாட்களில் விஜய்,அப்பா பிள்ளையாகவே இருந்தார். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தான், விஜய்காக கதை கேட்பார். அவருக்கு கதை பிடித்திருந்தால் விஜய் நடிப்பார்.விஜய்க்கான சம்பளத்தையும் கூட எஸ்.ஏ.சி.தான் தீர்மானிப்பார். ஆனால் நாளாவட்டத்தில் விஜய் தன்னை மாற்றிக்கொண்டார். தானே நேரடியாக கதை கேட்க தொடங்கினார். அவரே, தனக்கான சம்பளத்தை பேசினார்.படங்களின்Continue Reading

செப்படம்பர்,15- சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில்Continue Reading