செப்டம்பர்,15- தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது. தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே அவர்களால் விரட்ட முடியும். இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் ஹீரோ வடிவேலு, அந்த படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்தார்.படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு செய்தார்.இதனால் ஷங்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’கார்டுContinue Reading

செப்டம்பர்,14- தெலுங்கு சினிமா உலகில் பெயர் சம்பாதித்த அல்லு அர்ஜுன், ’புஷ்பா ’படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார் சுகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் வசூலும் குவித்தது.அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான புஷ்பா-தி ரூல் படத்தில் அவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’புஷ்பா -2’ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம்Continue Reading

செப்டம்பர்,14- கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமானContinue Reading

செப்டம்பர்,14- ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரிContinue Reading

செப்டம்பர், 12 கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ரஜினிகாந்த்,வெள்ளித் திரையில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துள்ளார். பல ஆண்டுகளாக தோல்வி படங்களை தந்த ரஜினிகாந்த், அண்மையில் ஜெயிலர் எனும் சூப்பர் டூப்பர் படத்தை கொடுத்தார். இதுவரைஅந்த படம் 650 கோடி ரூபாய் வசூலித்து ரிகார்ட் பிரேக் செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ எனும் படத்தில் கவுரவ தோற்றத்தில்Continue Reading

செப்டம்பர்,12- இசைப்புயல் ஏஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த மாதம் 12-ம் தேதிநடப்பதாக இருந்தது. கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த நிகழச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ’ ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும்’என்று ரகுமான் அறிவித்திருந்ததால் , டிக்கெட் வாங்கிய பல அயிரம் பேர்இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தனர்.நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.Continue Reading

செப்டம்பர்,11- களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டசம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய். அவரைப்போல் இன்று உச்ச நடிகர்களாக ஜொலிப்போர்,அதைக்காட்டிலும் கொஞ்சம்அதிகம் வாங்கி இருப்பார்கள். இப்போது அந்த நட்சத்திரங்களின் ஊதியம் நூறு கோடிb ரூபாயில் ஆரம்பிக்கிறது. படம் ஓடினால்,ஆட்டோக்காரர்களுக்கு பயணிகள் தருவது போல் , தயாரிப்பாளர்கள் ‘போட்டு ‘கொடுப்பார்கள். பெரிய பட்ஜெட் படங்களின் பாதிச்செலவு, நடிகர்களுக்கான சம்பளத்தில் போய் விடுகிறது. நிஜ நிலவரம் இப்படி இருக்க, நடிகர்Continue Reading

செப்டம்பர்,09- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் வாசு டைரக்‌ஷனில் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். சந்திரமுகி  திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 15-ஆம்Continue Reading

செப்டம்பர்.08- பல தமிழ் இயக்குநர்களுக்கு, அந்த இருக்கை சவுகரியமாக இருப்பதில்லை. உழைப்பு அதிகம். ஊதியம் குறைவு.படம் ஓடாவிட்டால்,வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழலும் உண்டு. ஆனால் நடிகன் வேடம் என்பது சொகுசு நாற்காலி மாதிரி. பத்து நாளோ, இருபது நாளோ கால்ஷீட் கொடுத்தோமா , கையில் காசு வாங்கினோமா என சுலபமாக முடியும் வேலை அது. இதனால் தான் பல வெள்ளிவிழாப்படங்களை கொடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் போன்றோர் அரிதாரம் பூச ஆரம்பித்தனர்.Continue Reading

செப்டம்பர்,07- தரமான சினிமாக்களை கொடுக்கும் தமிழ் இயக்குநர்களில் ஒருவர் தங்கர் பச்சான் .அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. இந்தப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை தீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தை அண்மையில் பா.ம.க. தலைவர்Continue Reading