
விடாமுயற்சி மொத்த பட்ஜெட்டில் பாதிதான் இதுவரை வசூல்.

அரசியலில் விஜய் போட்ட புதிய பாதை.

பெண்கள் மீதான வன்முறை அஜித்தை பாதிக்கும்’ —–

நாடோடி மன்னன்’ நினைவுகள் பற்றி எம்.ஜி.ஆர் பகிந்த தகவல் தெரியுமா?

ரூ 100 கோடி செலவில் விஷால் படம்.

‘இளையராஜா ‘ படம் கை விடப்பட்டதா ? —

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

விடா முயற்சி, முதல் நாள் வசூல் ரூ 23 கோடி மட்டுமே !

நடிகராக மாறிய இயக்குநர்களில் ‘டாப்’ யாா் ?

சிகரெட் பிடிப்பதால் அதிக பாதிப்பு ஆணுக்கா? பெண்ணுக்கா ?

‘விடாமுயற்சி ‘எப்படி இருக்கு ?

இசை அமைக்க இளையராஜாவுக்கு அதிக நேரமான பாடல் !

3 வயது மாணவி கர்ப்பம் .. முதல்வரிடம் எடப்பாடி கேட்கும் கேள்வி.

அஜித் படத்திற்கு அடாவடி வசூல்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 பேர் யார் ?யார் ?

‘மனைவி தேவை இல்லை’என்கிறார், மிஷ்கின் !

முன்னணி நடிகர்களுடன் நடித்த புஷ்பலதாவின் சாதனை.

டைரக்டருடன் காதலில் விழுந்த சமந்தா ?

சென்னையில் பனி.. விமான சேவை பாதிப்பு.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு.

கும்பமேளாவில் இறந்தவகள் பற்றி ஜெயாபச்சான் திடுக்கிடும் தகவல்.
விடாமுயற்சி மொத்த பட்ஜெட்டில் பாதிதான் இதுவரை வசூல்.
‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26 கோடியை வசூலித்தது. ரண்டாவது நாளில் ரூ.11 கோடி, மூன்றாவது நாளில் ரூ.14 கோடி, நான்காவது நாளில் ரூ.14 அளவிலும் வசூலை ஈட்டியுள்ளது. ‘விடாமுயற்சி’, இந்திய அளவில் மட்டும் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.65 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் ,முதல் 4 நாட்களில்
அரசியலில் விஜய் போட்ட புதிய பாதை.
‘இளைய தளபதி’ விஜய், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு முடிந்து விட்டது. தளபதி இப்போது தலைவர் ஆகியுள்ளார். இன்னும் ஓராண்டில் நடைபெற இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி வருகிறார். கட்சி நிர்வாகிகள் நியமனத்தில், மற்ற கட்சிகள் போல் இல்லாமல், மாற்றி யோசித்து, புருவம் உயர்த்த வைத்துள்ளார் விஜய். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்து விட்டு, முழு
பெண்கள் மீதான வன்முறை அஜித்தை பாதிக்கும்’ —–
லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கியுள்ள படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த 6 ஆம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’, முதல் நாளில் தமிழகத்தில் ரூ.25 கோடி வரை வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால் அஜித் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
நாடோடி மன்னன்’ நினைவுகள் பற்றி எம்.ஜி.ஆர் பகிந்த தகவல் தெரியுமா?
எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, இரட்டை வேடத்தில் நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நாடோடி மன்னன்’,’இந்தப்படம் ஓடினால் நான் மன்னன்.. ஓடாவிட்டால் நாடோடி’ என அந்தப்படம் தயாரிப்பில் இருக்கும்போது அவர், பலமுறை ஊடகங்களில் சொல்லி இருக்கிறார். ‘நாடோடி மன்னன் ‘திரைப்படம் குறித்து சட்டசபையில் சில கருத்துகளை எம்.ஜி.ஆர்.பதிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதி: ‘நாடோடி மன்னன்’படம் குறித்து உறுப்பினர் சுப்பு பேசினார். அந்தப்படத்தின் நான் ஏதோ சொன்னேன் ‘ என பேசியவர்,
ரூ 100 கோடி செலவில் விஷால் படம்.
தமிழில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களையும் வைத்து படம் இயக்கியவர் சுந்தர்.சி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆகிய உச்ச நட்சத்திரங்களும் அடங்குவர். இவரது திரைப்படங்கள் முதலுக்கு மோசம் செய்வதில்லை. நடிகர் விஷால்,சுந்தர்.சி இயக்கத்தில், ஆம்பள, ஆக்ஷன், மதகஜராஜா படங்களில் நடித்துள்ளார். இதில் மதகஜராஜா, 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது இந்தப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சுந்தர். சி
‘இளையராஜா ‘ படம் கை விடப்பட்டதா ? —
தமிழ் சினிமாவில் 70 களில், தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் இளையராஜா. ‘அன்னக்கிளி’ என்ற அவரது முதல் படமே நூறு நாட்களை தாண்டி ஓடி வசூல் குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து யாரும் தொட முடியாத மிகப்பெரிய உயரத்தை தொட்டவர். அவரது வாழ்க்கை வரலாறு ‘இளையராஜா’ எனும் பெயரிலேயே சினிவாக தயாராகிறது. இதில் தனுஷ், இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார்.
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள் பிப்ரவரி -07 உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள்: ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது
விடா முயற்சி, முதல் நாள் வசூல் ரூ 23 கோடி மட்டுமே !
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் “விடாமுயற்சி”.. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள. அனிருத் இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களால் கடந்த சில மாதங்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட’ விடாமுயற்சி’நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல்நாளில் திரைஉலக பிரபலங்கள் ஆரவ், திரிஷா, அனிருத், குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக்
நடிகராக மாறிய இயக்குநர்களில் ‘டாப்’ யாா் ?
எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய இயக்குநர்களான நாகராஜன், பந்துலு, பீம்சிங், . பாலசந்தர், மாதவன், திருலோகசந்தர், உள்ளிட்ட பலர் , காமிராவுக்கு பின்னால் நின்று நடித்தார்கள். அவர்கள் ஒருபோதும் அரிதாரம் பூசிக்கொள்ளவில்லை. நடிப்பை இன்னொரு தொழிலாக அவர்கள் ஏற்றதில்லை. நடிகர்களுக்கு இருந்த மவுசு, பிற்காலத்தில் பல இயக்குநர்களை, அரிதாரம் பூச வைத்தது. இதற்கு வழிகாட்டியாக இருந்தவர் பாரதிராஜா. தான் டைரக்ட் செய்த ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தில்
சிகரெட் பிடிப்பதால் அதிக பாதிப்பு ஆணுக்கா? பெண்ணுக்கா ?
பிப்ரவரி-06, ஒவ்வொரு சிகரெட்டும் ஒரு மனிதனின் வாழ் நாளில சராசரியாக 19.5 நிமிடங்களைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்களின் வாழ் நாளில் ஒவ்வொரு சிகரெட்டும் 22 நிமிடங்களை குறைத்து விடுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் தஙகள் வாழ் நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள். ‘ அதே நேரத்தில் எந்த வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினாலும் உடல் பாதிப்புகள் குறைந்து விடும் என்பது லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் இங்கிலாந்தின்
‘விடாமுயற்சி ‘எப்படி இருக்கு ?
தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட வெற்றிப்படங்களை டைரக்டு செய்தவர் மகிழ் திருமேனி. அவர் முதன்முறையாக அஜித்துடன் இணைந்துள்ள , படம்- விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லன்களாக ஆரவும் அர்ஜுனும் நடித்துள்ளனர். ‘விடாமுயற்சி’இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ்
இசை அமைக்க இளையராஜாவுக்கு அதிக நேரமான பாடல் !
இசை அமைப்பாளர் இளையராஜாவிடம் , ‘நீங்கள் இசை அமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்ட பாடல் எது ?’ எனறு கேட்டதற்கு அவர் அளித்துளள் பதில சுவாரசியமானது அவர் அளித்த பதில்: ‘ஒரு முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை என் ரெக்கார்டிங்கு வாடா’ என கூப்பிட்டேன் .‘காலை 11 மணிக்கு முக்கியமான வேலை இருக்கு ..முடியாதுடா ‘ என்றான். ‘11 மணிக்குள் முடிச்சிடலாம்..பாட்டு ரெடி.வந்து பாடு’ என்றேன். வந்தான்.. பாட்டை கத்துக்கிட்டான்.. பாடினான்..பாடிக்கொண்டே இருந்தான்.
3 வயது மாணவி கர்ப்பம் .. முதல்வரிடம் எடப்பாடி கேட்கும் கேள்வி.
பிப்வரி -05, கிருஷ்ணகிரி அருகே அரசு பள்ளிக் கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி கர்ப்பமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததை அடுத்து அவருடைய வீட்டுக்குச் சென்று தலைமை ஆசிரியர் விசாரித்து இருக்கிறார். அப்போது மாணவியின் தாயார், தமது மகளின் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதால் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார். இதனால்
அஜித் படத்திற்கு அடாவடி வசூல்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அஜித் நடித்துள்ள , ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் , நாளை ரீலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு தென்மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் ‘புக்’ செய்யப்பட்டுள்ளன. முதல் காட்சிக்கு எப்போதுமே ‘டிமாண்ட்’ இருக்கும். இதனால், மதுரையில் சில தியேட்டர்களில் முதல் ஷோவுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்க வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுப்பதால் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். . அதேசமயம் ‘மால்கள்’, அரசியல்
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 பேர் யார் ?யார் ?
பிப்ரவரி-05. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக அனுப்பப்பட்ட இந்தியர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் டெக்சாசின் சான் அண்டியானாவில் இருந்து செவ்வாய்க் கிழமை புறப்பட் அமெரிக்க ராணுவத்தின் சி-17 விமானம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதில் அதிகபட்சமாக ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 30 பேர் அடங்குவர். நாடு கடத்தப்பட்டவர்களில் மொத்தம் 30 பேர் பஞ்சாபில் வசிப்பவர்கள்.
‘மனைவி தேவை இல்லை’என்கிறார், மிஷ்கின் !
‘ சித்திரம் பேசுதடி’ படம் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின் . தரமான படம் என விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சினிமா, அடுத்து மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படமும் அற்புதமான திரில்லர். ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘துப்பறிவாளன்’, ‘பிசாசு’, ‘சைக்கோ’ என அடுத்தடுத்து படங்கள் எடுத்த மிஷ்கின், பின்னர் தொடர் சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். அண்மையில் படவிழா ஒன்றில் அவர் மது குடிப்பதை நியாயப்படுத்தி திருவாய் மலர்ந்தார். இன்னும்
முன்னணி நடிகர்களுடன் நடித்த புஷ்பலதாவின் சாதனை.
நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 86. புஷ்பலதாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். 1961- ஆம் ஆண்டு வெளிவந்த, ‛கொங்கு நாட்டு தங்கம்’ திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா. தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார். எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் எங்கள் தங்கம்,உரிமைக்குரல், நீதிக்கு தலை வணங்கு ஆகிய படங்களும், சிவாஜியுடன் நடித்த சினிமாக்களில் பார் மகளே
டைரக்டருடன் காதலில் விழுந்த சமந்தா ?
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் கல்யாண வாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை. 2007- ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 2021- ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யா. நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததால் திரையுலகிலிருந்து சில காலம் விலகி
சென்னையில் பனி.. விமான சேவை பாதிப்பு.
‘பிப்ரவரி-04, சென்னையில் கடுமையான பனிமூட்டத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.. ஓடு பாதை தெரியாததால் சென்னையில் தரையிறங்க வேண்டய ஆறு விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய 25- க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் உரிய நேரத்திற்கு பயணம் செய்ய முடியவில்லை..
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிம்பு.
நடிகர் சிம்புவுக்கு நேற்று பிறந்த நாள். பிறந்த நாளில் அவர், தான் நடிக்க உள்ள 3 புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டார். கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனை தொடர்ந்து டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிம்புவுக்கு 49- வது படம் .இதனை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
கும்பமேளாவில் இறந்தவகள் பற்றி ஜெயாபச்சான் திடுக்கிடும் தகவல்.
பிப்வரி -03. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் லட்சக் கணக்கான மக்கள் நீராடும் கங்கை ஆற்றில் , சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் கொட்டப்பட்டதால் மிகவும் மாசுபட்டுவிட்டது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கூறி உள்ளார். உலகின் மிகப்பெரிய ஆன்மீக விழவான மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றதாக யோகி ஆதித்யநாத் அரசு கூறுவதும் உண்மையில்லை என்று ராஜ்யசபா எம்.பி.யான திருமதி
பெண் ஏடிஜிபி கல்பனாவை கொல்ல சதி செய்தது யார் ?
பிப்ரவரி-03. தமிழக காவல் துறையில் ஏடிஜிபியாக உள்ள கல்பனா நாயக் “தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறியுள்ள புகாருக்கு டிஜிபி விளக்கம் அளித்து உள்ளார் காவல் துறைக்கு சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களை தோ்வு செய்யும் சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்தவர் கல்பனா நாயக். இவர் தாம் அந்த துறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முயன்றதை அடுத்து தம்மை கொல்ல சதி நடந்ததாக
தமிழ்நாட்டில் மேலும் பல விமான நிலையங்கள்.
பிப்ரவரி -03, தமிழ்நாட்டில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் என ஐந்து விமான நிலையங்கள் உதாண் திட்டத்தின் கீழ்மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. சேலம் விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமானப் போக்குவரத்து ஏற்கனவே நடைபெற்று வருகிறது. நெய்வேலி
அஜித் கேட்கும் சம்பளம் எவ்வளவு தொியுமா?
அல்டிமேட் ஸ்டார்’ அஜித்குமார், இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து கொடுத்து விட்டு, கார் ரேஸ் பந்தயத்துக்கு வெளிநாடு பறந்து விட்டார். இதில் முதலாவதாக வரப்போவது –விடாமுயற்சி. பொங்கல் அன்று வெளியாக இருந்த இந்த படம், தள்ளிவைக்கப்பட்டு, வரும் 6-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’ தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’.அஜித் தவிர ,அர்ஜுன், திரிஷா,
‘பழைய சோறு’ – – கலைஞருக்கு நன்றி சொன்ன எம்.ஜி.ஆர் !
கருணாநிதியும்,எம்.ஜி.ஆரும் எப்போதுமே ‘நண்பர்கள்.! எம்.ஜி.ஆரும், கலைஞர் கருணாநிதியும் திரைஉலகில் இருந்தபோது துளிர்த்த நட்பு, இருவரும் அரசியலில் பயணித்தபோது, மேலும் வளர்ந்தது. அதிமுகவை ஆரம்பித்து , எம்.ஜி.ஆர்.ஆட்சியை பிடித்த பின்னரும் இந்த நட்பு தொடர்ந்தது. இவர்கள் நட்பின் ஆழத்தை ஊடகங்கள் ,பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளன. தங்கள் இடையேயான அன்பை, சட்டசபையில் எம்.ஜி.ஆர். ஒரு முறை பதிவு செய்துள்ளார். 1977 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது: ‘’ கலைஞர்
சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க உழையுங்கள் – விஜய் அழைப்பு .
ஜனவரி -02, தமிழ்நாட்டில் 2026- ஆம் ஆண்டில நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் தவெக கட்சியின் இலக்கு என்று விஜய் தெரிவித்து உள்ளார், தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நாளை முன்னிட்டு விஜய் தன்னுடைய கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் … என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு. வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில்,
ரசிகைகளுக்கு உதட்டில் முத்தமிட்ட, உதித் நாராயணன். —
லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ படத்தில் இடம் பெற்ற ‘காதல் பிசாசே’ பாடலை பாடியவர் உதித் நாராயணன். தமிழில் பல பாடல்களை பாடியுள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள உதித் நாராயனுக்கு திரளான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சில ஆண்டுகளாக , லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் அவரின் பாடல்களை பாடி வருகிறார். அண்மையில் நடந்த லைவ் ஷோவில், உதித் நாராயணன் பாடி கொண்டிருக்கும்போது
ரஜினி பட தயாரிப்பாளர் மரணம்! —
-‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்துக்கு பிடித்த ஒரே படம் ‘முள்ளும் மலரும்’.இந்த படத்தை தயாரித்த ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு வயது 70. ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு நடித்த ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வெச்சா’, சத்யராஜ் நடித்த ‘பங்காளி’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக் கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, பிரபு நடித்த ‘பசும்பொன்’, எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் முன்னாள் தமிழக
பட்ஜெட்டினால் கிடைத்து உள்ள பலன்கள் என்ன ?
ஜனவரி-02. மாத ஊதியம் பெறுவோர்க்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மத்திய பட்ஜெட்டில் ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது இந்த சலுகையை அடுத்து இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். அவர் எட்டாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்து முக்கிய அம்சங்கள் வருமாறு
சிகரெட் பிடிச்சா தப்பா என்று கேட்கிறார் சீதையாக நடித்தவர் ! —
பிரபல இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ,நம்ம ஊர் தனுஷ், இந்தியில் அறிமுகம் ஆனார். மீண்டும் அவரது இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்தார். 3-வது முறையாகவும் இந்த கூட்டணி இணைகிறது. ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும், இந்த புதிய படத்தின் பெயர் -, ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தனுஷ் ஜோடியாக நடிக்க கிரித்தி