*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் சராசரியாக 72. 09 சதவிகித வாக்குப் பதிவு … கடந்த தேர்தலில் பதிவான 69 விழுக்காட்டை விட இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு. *தமிழ்நாடடில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 77.67 விழுக்காடு வாக்குகளும் தருமபுரியில் 75. 44 விழுக்காடு வாக்குகளும் பதிவு… மிகவும் குறைந்த பட்சமாக தென் சென்னையில் 67.35 சதவிகிதத்தினர் வாக்களிப்பு. *மின்னணு வாக்கு இயந்திரங்கள் பெட்டிகளில்Continue Reading

*தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் …. 6.23 கோடி. 68,321 பேர் நாளை வாக்களிக்க வாக்கு சாவடிகள் அமைப்பு. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதி. *நாடளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு …இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26- ஆம் தேதி. *தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விடContinue Reading

*கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டில் அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.. தொலைக் காட்சி, சமூக ஊடகள் மூலம் பரப்புரை செய்வதும் நிறுத்தப்பட்டது. *பரப்புரை ஓய்ந்த பிறகு சமூக ஊடகங்கள் வழியாக வாக்குக் கேட்டு விளம்பரம் செய்தால் இரண்டு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை … ஒவ்வொரு தொகுதியிலும் தங்கியிருக்கும் வெளியூர் நபர்களும் வெளியேற்றம். *நாளை மறுதினம் காலை 7 மணிContinue Reading

*பிரச்சாரத்துக்கு இன்னும் ஒரு நாளே எஞ்சி இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பு .. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம். *நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் …. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்ய அனுமதியில்லை. *பிரச்சாரம் நாளைContinue Reading

*நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை மறுதினம் மாலையுடன் முடிவடையுள்ள நிலையில் பரப்புரையை ஆறு மணி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு … வெயில் கொளுத்துவதால் ஒரு மணி நீடித்து இருப்பதாக விளக்கம். *இந்தியாவில் வேலை இல்லாதவர்களில் 83 பேர் இளைஞர்கள் என்று மு.க.ஸ்டாலின் மாதவரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் புகார் … கடந்த 2019- ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பாஜக நகல் எடுத்து வெளியிட்டுContinue Reading

*ஈரான்-இஸ்ரேல் இடையே போர் மூண்டது…. இஸ்ரேலை குறிவைத்து பல நூறு ஏவுகணைகளை வீசி ஈரான் ராணுவம் தாக்குதல். இந்திய நேரப்படி இன்றிரவு ஈரான் வெளியிட்ட தகவலில் தாக்குதலை நடத்தி முடித்துவிட்டதாக அறிவிப்பு. *இஸ்ரேலின் ராணுவத் தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு பெரிய அளவில் சேதம் என்று ஈரானும் தகவல்…. மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்துமாறுContinue Reading

*அன்பிற்கும் உண்டே அடைக்கும் தாழ் 1 என்னுடைய ச கோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியைத் தரும் … கோவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்ததில் நேற்று ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது பற்றி ஸ்டாலின் கருத்து. *தமிழக உளவுத் துறை ஐ.ஜி.செந்தில் வேலன் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலை பேசி உரையாடல்களை இடைமறித்து ஒட்டுக் கேட்பதாக அதிமுக புகார் … தலைமைContinue Reading

*கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , ராகுல் காந்தி பங்கேற்பு.. கோவை ,நீலகிரி,பொள்ளாச்சி,திருப்பூர், கரூர் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை.. *நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் நாயகன் என்று கோவை கூட்டத்தில் ஸ்டாலின் புகழாரம் .. தனியார் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறித்ததாகவும் புகார், *இந்தியாவில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி அரசு என்று கோவைContinue Reading

*பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கணினிப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் உதவிகள். மகப்பேறுக்கு பிறகு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் என ஏழு பிரிவுகள் குறித்து அந்தந்த துறைகளால் வெளியிடப்பட்டு உள்ள ஆய்வறிக்கையில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் … கடந்த 2022-2023 இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 16.3 சதவிகிதம் ஆகும். *மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை குறித்துContinue Reading

*திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதாக பிரதமர் மோடி வேலூரில் புதிய நீதிக் கட்சி் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசுகையில் புகார் … தற்போதைய திமுக நிர்வாகிகள் பெண்களை அவமதிப்பதை வேலூர் மக்கள் அறிவார்கள் என்றும் கருத்து. *’தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்’ … அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால்Continue Reading