*கேப்டன் விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை அடக்கம் … கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புரட்சிக் கலைஞர் உடலுக்கு பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி. *இரு வாரங்கள் முன்பு குணமடைந்து வீடு திரும்பிய விஜயகாந்த் கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மியாட் மருத்துவனையில் மீண்டும அனுமதிக்கப்ட்டிருந்தார்.. சிகிக்சை பலனின்றி காலையில் உயிர்பிரிந்தது. *கடந்த 1951 ஆண்டு மதுரையில் பிறந்த விஜயகாந்த்Continue Reading

*பிரதமர் மோடி தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த், விஜய காந்த்தின் நடிப்பு  பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த்.என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி. *ராகுல் காந்தி இரங்கல்- சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரதுContinue Reading

*இந்திய ஒற்றுமை பயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘இந்திய நீதி பயணம்’ என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை மணிப்பூரில் ஜனவரி 14-ம் தேதி தொடங்குகிறார் ராகுல் காந்தி. 14 மாநிலங்களில், 6200 கி.மீ. தூரம் பயணித்து மும்பையில் மார்ச் 20-ம் தேதி பயணம் முடிவடையும் என்று காங்கிரஸ் தகவல். *சென்னை எண்ணூர் அருகே உள்ள கோரமண்டல் என்ற தனியார் உர நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வரContinue Reading

*தேசியக்  கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு  கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு  மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு: மதுரை மாநாடு பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை. அதிமுக மதுரை மாநாடு போல் இனி யாராலும் மாநாடு நடத்த முடியாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும். பல சோதனைகளை சந்தித்ததும் அதிமுக தான், அதனை வெற்றியாக்கியதும் அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான். அதிமுக செயற்குழு,Continue Reading

  * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து  10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்  துறை அறிவிப்பு. * தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில்  ஒரு இடத்திலும் முன் பதிவு  மையம்Continue Reading

  செப்டம்பர் 19- ’பாஜகவுடனான கூட்டணிமுறிந்து விட்டது’என அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்து விட்டது.மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்ததால், இந்த அதிரடி முடிவை அதிமுக மேற்கொண்டுள்ளது. இன்னும் எட்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அண்மையில் டெல்லி சென்று , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அதிமுக- பாஜக கூட்டணியை இருவரும்உறுதி செய்தனர்.Continue Reading

செப்டம்பர்,14- ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரிContinue Reading

செப்டம்பர்,13- அண்மையில் 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 4 தொகுதிகளில் வென்றது.பாஜக 4 இடங்களை பிடித்தது. மே.வங்க முதலமைச்சராக உள்ள மம்தா பானர்ஜியும், உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அகிலேஷ் யாதவும், இந்த தேர்தலில் பாஜகவுக்கு மரண பயத்தை காட்டியுள்ளனர். அவர்களின் கட்சிகள்,தங்கள் மாநிலங்களில் பாஜகவை வேரறுத்துள்ளன. இந்த இரு மாநிலங்களிலும், வலுவாக இருந்து வந்த பாஜக இடைத்தேர்தலில் வீழ்த்தப்பட்டுள்ளது.bContinue Reading

செப்டம்பர்,12 மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் முடிவடைகிறது. எனவே ஒரே நேரத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர்கள் இந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டு வருகிறார்கள். மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ஆய்வுகளை முடித்து விட்டனர்.Continue Reading