தலைப்புச் செய்திகள் (28-10-2023)

 

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து  10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்  துறை அறிவிப்பு.

* தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில்  ஒரு இடத்திலும் முன் பதிவு  மையம் …  அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பற்றி புகார் அளிப்பதற்கான எண்ணையும் வெளியிட்டார் போக்குவரத்துத் துறை  அமைச்சர் சிவசங்கர்.

* இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றுவதை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்…  சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்.

* சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைப்பு.. சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

* சென்னையில் திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி  மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம்  சிகிச்சை பலனின்றி மரணம் …  மாட்டை தெருவில் அலையவிட்டவருக்கு கடுமையான தண்டனை விதிக்குமாறு பலரும் கோரிக்கை.

* ஆயிரத்து 500 புத்தகங்களை சிறைகளுக்கு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .. தமிழகத்தில் உள்ள 14 சிறைகளுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு.

* சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நேற்றிரவு தாக்குதல்  நடத்திய  பேர் கைது .. . மது போதையில் இருந்தவர்கள் காவலாளியுடன் தகறாறு செய்துவிட்டு கல்வீசித் தாக்கியதாக  போலீஸ் தகவல்.

* ஆளுநர் மாளிகை மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல்களுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் .. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை.

* பசும் பொன்னில் முத்தராமலிங்கத் தேவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்  .. முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவது பற்றி ஆய்வு செய்ய வந்த கட்சியின் மேலிடக் குழு  ஆளுநருடன் சந்திப்பு …  பாஜக வேகமாக வளருவதை திமுக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா புகார்.

* மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை, சேலம் இடையேயான விமான சேவை நாளை தொடங்குகிறது ..  சென்னையில்  இருந்து காலை  11.30 மணிக்கும் சேலத்தில் இருந்து பகல் ஒரு மணிக்கும் விமானம் இயக்குகிறது இன்டிகோ நிறுவனம்.

* எடப்பாடி பழனிசாமி மேல்மருவத்தூர்  சென்று பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அஞ்சலி …  அடிகளாரின் மனைவி மற்றும் உறவினர்களை  சந்தித்து ஆறுதல்.

* மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கான பணி ஆணையை வழங்கினார்  பிரதமர் நரேந்திர மோடி … வேலைப் பெற்றவர்களுக்கு இன்றைய தினம் கொண்டாட்ட தினம் என்று பேச்சு.

* மத்திய  அரசின் வேலைத் தேர்வில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் … ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி 13  மொழிகளில்  தேர்வுகளை தேர்வாணையம் நடத்துவதாகவும் விளக்கம்.

* காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்… தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.

* இஸ்ரேல் போரை நிறுத்துமாறு ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 45 நாடுகள் பங்கேற்கவில்லை… தீர்மானத்தில்  ஹமாஸ் பற்றி குறிப்பிடததால் புறக்கணித்ததாக தகவல்.

* காசாவுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்டப்  பொருட்களை இன்னும் அதிக அளவில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டரோஸ் வலியுறுத்தல் …  எகிப்தின் ராபா எல்லை வழியாக அதிக லாரிகளை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டுகோள்.

* காசாவில் இ்ஸ்ரேல் தொடர்ந்து வான் வழி தாக்குதல் … ஹமாஸ் அமைப்பின் டிரோன் பிரிவு தளபதி  அபு அரகபா கொல்லப்பட்டதாக தகவல்.

* இணைய தளம் , செல்போன் சேவை உள்ளிட்ட தொலை தொடர்பு சேவைகளுக்கான டவர்கள் மீது தாக்குதல்..  காசாவில் வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு.

* அமெரிக்காவின் மெய்னே மாகணத்தில் நேற்று முன்தினம் 18  பேரை சுட்டுக் கொன்று விட்டு  தப்பி ஓடிய நபர்  பிணமாக மீட்பு … தலையில் சுடப்பட்டு காட்டுக்குள் பிணாமாக கிடந்ததாக தகவல்..

* சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக்  போட்டிகளில் 29 தங்கம் உட்பட 111 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் இந்தியா .. பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து.

000தலைப்புச் செய்திகள் (28-10-2023)

* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில ஐந்து இடங்களில இருந்து  10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் – பயணிகள் சிரமமில்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக நவம்பர் 9 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்  துறை அறிவிப்பு.

* தீபாவளிக்காக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கோயம்பேட்டில் பத்து இடங்களிலும் தாம்பரத்தில்  ஒரு இடத்திலும் முன் பதிவு  மையம் …  அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பற்றி புகார் அளிப்பதற்கான எண்ணையும் வெளியிட்டார் போக்குவரத்துத் துறை  அமைச்சர் சிவசங்கர்.

* இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றுவதை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம்…  சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம்.

* சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைப்பு.. சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

* சென்னையில் திருவல்லிக்கேணியில் கடந்த 18 ஆம் தேதி  மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம்  சிகிச்சை பலனின்றி மரணம் …  மாட்டை தெருவில் அலையவிட்டவருக்கு கடுமையான தண்டனை விதிக்குமாறு பலரும் கோரிக்கை.

* ஆயிரத்து 500 புத்தகங்களை சிறைகளுக்கு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .. தமிழகத்தில் உள்ள 14 சிறைகளுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு.

* சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நேற்றிரவு தாக்குதல்  நடத்திய  பேர் கைது .. . மது போதையில் இருந்தவர்கள் காவலாளியுடன் தகறாறு செய்துவிட்டு கல்வீசித் தாக்கியதாக  போலீஸ் தகவல்.

* ஆளுநர் மாளிகை மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது நடந்த தாக்குதல்களுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் .. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை.

* பசும் பொன்னில் முத்தராமலிங்கத் தேவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்  .. முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் அறிவிப்பு.

* தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவது பற்றி ஆய்வு செய்ய வந்த கட்சியின் மேலிடக் குழு  ஆளுநருடன் சந்திப்பு …  பாஜக வேகமாக வளருவதை திமுக அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா புகார்.

* மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை, சேலம் இடையேயான விமான சேவை நாளை தொடங்குகிறது ..  சென்னையில்  இருந்து காலை  11.30 மணிக்கும் சேலத்தில் இருந்து பகல் ஒரு மணிக்கும் விமானம் இயக்குகிறது இன்டிகோ நிறுவனம்.

* எடப்பாடி பழனிசாமி மேல்மருவத்தூர்  சென்று பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அஞ்சலி …  அடிகளாரின் மனைவி மற்றும் உறவினர்களை  சந்தித்து ஆறுதல்.

* மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51 ஆயிரம் பேருக்கான பணி ஆணையை வழங்கினார்  பிரதமர் நரேந்திர மோடி … வேலைப் பெற்றவர்களுக்கு இன்றைய தினம் கொண்டாட்ட தினம் என்று பேச்சு.

* மத்திய  அரசின் வேலைத் தேர்வில் நம்பகத் தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் … ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி 13  மொழிகளில்  தேர்வுகளை தேர்வாணையம் நடத்துவதாகவும் விளக்கம்.

* காஸாவில் மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றம்… தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன.

* இஸ்ரேல் போரை நிறுத்துமாறு ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 45 நாடுகள் பங்கேற்கவில்லை… தீர்மானத்தில்  ஹமாஸ் பற்றி குறிப்பிடததால் புறக்கணித்ததாக தகவல்.

* காசாவுக்கு மருத்துவம், உணவு உள்ளிட்டப்  பொருட்களை இன்னும் அதிக அளவில் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு ஐ.நா.பொதுச் செயலாளர் குட்டரோஸ் வலியுறுத்தல் …  எகிப்தின் ராபா எல்லை வழியாக அதிக லாரிகளை காசாவுக்குள் அனுமதிக்க வேண்டுகோள்.

* காசாவில் இ்ஸ்ரேல் தொடர்ந்து வான் வழி தாக்குதல் … ஹமாஸ் அமைப்பின் டிரோன் பிரிவு தளபதி  அபு அரகபா கொல்லப்பட்டதாக தகவல்.

* இணைய தளம் , செல்போன் சேவை உள்ளிட்ட தொலை தொடர்பு சேவைகளுக்கான டவர்கள் மீது தாக்குதல்..  காசாவில் வெளி உலகத் தொடர்புகள் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு.

* அமெரிக்காவின் மெய்னே மாகணத்தில் நேற்று முன்தினம் 18  பேரை சுட்டுக் கொன்று விட்டு  தப்பி ஓடிய நபர்  பிணமாக மீட்பு … தலையில் சுடப்பட்டு காட்டுக்குள் பிணாமாக கிடந்ததாக தகவல்..

* சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக்  போட்டிகளில் 29 தங்கம் உட்பட 111 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் இந்தியா .. பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *