சீமானுடன் விஜயலட்சுமி நேருக்கு நேர் நிற்பாரா?

செப்படம்பர்,15-

சினிமா நடிகை விஜயலட்சுமியால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தூக்கம் தொலைத்து நிற்கிறார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்
சீமான் மீது விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரே இதற்கு காரணம். ’’மதுரையில் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டார்- கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தோம்-7 முறை கருத்தரித்தேன் -ஆனால் என் அனுமதி இல்லாமல் மாத்திரை கொடுத்து சீமான் கருக்கலைப்பு செய்தார்-என்னை ஏமாற்றிய சீமான்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எபுகாரில் தெரிவித்திருந்தார், விஜயலட்சுமி. இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கட்டாய கருக்கலைப்புசெய்ததாக குற்றம்சாட்டியதால், விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீமான் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். சீமான் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.இந்நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சீமானுக்கு இரண்டாம் முறையாக சம்மன் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவரது வழக்கறிஞர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுலலகத்தில் சீமான் எழுதிய மனு ஒன்றை அளித்தனர். அதில் சீமான்’காவல்நிலையத்தில் நான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயார்- ஆனால் நான் ஆஜராகும் போது என் மீது குற்றம் சாட்டும் விஜயலட்சுமியும், அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமியும் காவல்நிலையத்துக்கு வர வேண்டும்’ என நிபந்தனை விதித்திருந்தார்.வழக்கு விசாரணைக்காக சீமான் 18 ஆம் தேதி வளசரவாக்கம் போலீசில் ஆஜராக முடிவு செய்துள்ளார்.

சீமான் கோரிய படி, விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் அன்று ஆஜராவார்களா ? என்பது தெரியவில்லை. சீமான் ஆஜராகும் போது இருவரும் காவல்நிலையத்துகு வர வேண்டும் என விஜயலட்சுமிக்கும், வீரலட்சுமிக்கும் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.மூவரும் நேருக்குநேர் நிற்பார்களா?

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *