நாற்பது வயதைக் கடந்தும் திரிஷா நயாகியாக நடிப்பதன் ரகசியம்.

செப்டம்பர்,19-

நடிகைகள் 40 வயதை தாண்டி விட்டால் அக்கா, அம்மாகேரக்டர்கள் தான் கொடுப்பார்கள்.ஆனால் திரிஷாவுக்குஅதிர்ஷ்டம். நாற்பது வயதை அவர் கடந்துள்ள நிலையில்கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வருகிறது.

சாதாரண படங்கள் இல்லை.பெரிய பட்ஜெட், பெரிய இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்கள் படங்கள்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் அனைத்து பெரிய ஹீரோக்களுடன் நடித்த ஒரே நடிகை திரிஷா மட்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் வந்த படங்கள் தோல்வி அடைந்தன. திரிஷா அவ்வளவு தான் என, சக போட்டி நடிகைகள் விமர்சனம் செய்தனர். மணி ரத்னம் இயக்கிய மகா பட்ஜெட் படமான ’பொன்னியின் செல்வன்’அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்குமாரின் ’விடாமுயற்சி’ படத்திலும் திரிஷாதான் நாயகி.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல். ரஜினிகாந்தின்171-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தி படமொன்றில் நடிக்கவும் திரிஷாவுக்கு அழைப்பு வந்துள்ளது. சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க உள்ள இந்த படத்தை விஷ்ணு வர்த்தன் டைரக்டு செய்ய இருக்கிறார்.. திரிஷா ஏற்கனவே காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து இருந்தார். அந்த படம் சரியாக போகவில்லை.

விஷ்ணு வர்த்தனாவது, திரிஷாவுக்கு வெற்றியை கொடுக்கட்டும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *