புதிய மின் கட்டண உயர்வு அமல்.. யூனிட்டுக்கு 21 பைசா வரை அதிகரிப்பு.

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான  புதிய மின் கட்டண உயர்வு  தமிழகத்தில் அமலுக்கு வந்து உள்ளது. இதன் படி 1 யூனிட் -க்கு  13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் அதிகரிக்கிறது.

தமிழ் நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் கடந்த செப்டம்பரில் 2026-27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வுக்கான பரிந்துரையை வழங்கியது. மேலும், இந்தக் கட்டண உயர்வு  பரிந்துரைகளை அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில்  கொடுத்திருந்தது.

இதன்படி, ஆண்டுதோறும், ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6%, இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும் என்பது விதியாகும்.

இதன்படி கட்டண உயர்வு விகிதம் மறு ஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 % லிருந்து 2.18 % ஆக குறைக்கப்பட்டது. இதில்  வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 % உயர்வை தமிழக அரசே ஏற்றுக்கொண்டு, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அவருடைய அறிவிப்பால் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது.

விவசாய இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை  அளவில் மின்கட்டணம் உயரும்  என்று கடந்த 7 -ஆம் தேதி  அறிவித்தது ஜூலை முதல் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

000

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *