மெரினாவில் பிறந்த நாள்..இளைஞர் கொலை. இருவர் படுகாயம்.

சென்னையில் மெரினா கடற்கரைக்கு பிறந்தநாள் கொண்டாட வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞரை திருட வந்ததாக நினைத்து கடை ஊழியர்கள் அடித்துக கொலை செய்தது தெரியவந்திருக்கிறது.

மெரினா கடற்கரையின் உட்புறச் சாலையில் பொது பணித்துறை அலுவலகம் எதிரே இளைஞர்கள் மூன்று பேர் ரத்தக் காயங்களுடன் கிடப்பது பற்றிய தகவல் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு காலையில் கிடைத்தது. அவர்கள் விரைந்துச் சென்று படுகாயத்துடன் இருந்த மூன்று இளைஞர்களையும் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் விக்னேஷ் என்ற 20 வயது இளைஞர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில் இறந்த விக்னேஷ் ( 20) ஆவடியை சேர்ந்தவர் என்பதும் படுகாயமடைந்த நபர்கள் அரவிந்தன்22) மற்றும் சஞ்சய்18) என்பதும் உறுதியாகி உள்ளது.

இவர்களில் சஞ்சய் என்பவருக்கு பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட தம்முடைய நண்பர்களான விக்னேஷ், அரவிந்தன் ஆகியோருடன் இரு சக்கர் வாகனத்தில் மெரினாவுக்கு நேற்றிரவு வந்துள்ளனர். சர்வீஸ் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்று சஞ்சயின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். பின்னர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்த இடத்திறகு வந்துள்ளனர். வண்டி மீது வைத்துவிட்டுப் போன ஹெல்மெட் காணாததால் அதனை தேடியுள்ளனர். அப்போது திருட வந்திருப்பதாக நினைத்து, அவர்களுடன் கடை ஊழியரகள் நடத்திய வாக்குவாதம் மோதலாக முற்றியுள்ளது.

கடை ஊழியர்கள் அங்கிருந்த கட்டையால் விக்னேஷ், சஞ்சய், அரவிந்தன் ஆகியோரை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் இறந்துவிட , மற்ற இருவரும் காயத்துடன் அங்கேயே கிடந்து உள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக கடை ஊழியர்கள் மூன்று பேரை பிடித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *