ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறப்பு… தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

June 02, 2023

மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து, வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால், இந்த வார இறுதி நாட்களில் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூருவுக்கும் 1,300 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மதுரை, திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *