உதகை அருகே பஜாரில் உலா வந்த கரடி – பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் அதிகாலை நேரத்தில் கரடி உலாவந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைவீதிகளில் உலாவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள், இரவு நேரங்களில் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்காக எமரால்டு பஜார் பகுதிக்கு வந்தனர். அப்போது, கரடி ஒன்று திடீரென வந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இரவு நேரங்களில் வனவிலங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென எமரால்டு பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *