அமைச்சர் பதவியில் இருந்து நாசர் நீக்கம்…. புதிய அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா…

மே 9

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பததாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்ற, அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 11-ம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாகவும், புதிய அமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மத்திய மந்திரி டி.ஆர். பாலுவின் மகன் ஆவார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *