வந்தே பாரத் ரயில் சேவை – கோவைக்கு பயணித்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி!

ஏப்ரல்.25

சென்னை – கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவைகள் மற்றும் பயணிகளின் வசதி குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, பாஜக ஓ.பி.சி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

கோவை – சென்னை இடையே இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை மற்றும் பயணிகளின் வசதிகள் குறித்து அறிய ஈரோடு வந்த மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி மேற்பார்வையாளருமான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் ஆகியோர் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து கோவை ரயில் நிலையம் சென்றனர். ரயிலில் பயணித்த அமைச்சர், பயணிகளுக்கான சிறப்பு வசதிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *