பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைமீதான அவதூறு வழக்கு – ஹெச்.ராஜா வரவேற்பு..!

மே.11

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதை வரவேற்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு எச். ராஜா பேட்டியளித்தார். அதில், “அண்ணாமலை மீது முதலமைச்சர் வழக்கு தொடுத்திருப்பதை வரவேற்கிறேன். அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்லமாட்டார். முதலமைச்சர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சொல்லி ஏற்கனவே 5 நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள். எனவே, முதலமைச்சரின் இந்த வழக்கு தொடுத்திருக்கும் நடவடிக்கையின் மூலம், அவர் மீது வைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றச்சாட்டு விசாரணை வரை செல்ல அவரே வழிவகை செய்துள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *