கோவை-சென்னை வந்தேபாரத் ரயில் கால அட்டவணை : தென்னக ரயில்வே வெளியீடு

கோவை- சென்னை இடையேயான இயக்கப்பவுள்ள அதிகவேக வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் அதிவேக ரயிலான வந்தேபாரத் ரயிலின் சேவையை நாளை (ஏப்.8) பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இதனிடையே, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கான கால அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வந்தே பாரத் ரயிலானது கோவை- சென்னை இடையே புதன்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து வண்டி எண் 20644 காலை 6 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். கோவையிலிருந்து புறப்படும் இந்த ரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், மறுமார்க்கத்தில், வண்டி எண் 20643 சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்கள் வழியாக கோவையை இரவு 8.15 மணிக்கு அடையும். பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை நாளை தொடங்கிவைத்த பிறகு, ஏப்ரல் 9ம் தேதி முதல் இந்த கால அட்டவணைப்படி வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *