ஐ.பி.எல் போட்டிக்கு டிக்கெட் கிடைக்குமா? – எஸ்.பி.வேலுமணிக்கு சுவாரஸ்யமான பதில் கொடுத்த அமைச்சர் உதயநிதி..!

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பாஸ் வழங்க வேண்டுமென கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அளித்த சுவாரஷ்யமான பதிலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சிரிப்பலை நீடித்தது.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பிரத்யேக பாஸ் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது. தற்போது, அதிமுக எம்.எல்.ஏ. -க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை. எங்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி கோரிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டியை நடத்துபவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான். அவரிடம் பேசி ஒரு எம்.எல்.ஏ.க்கு 5 டிக்கெட் வாங்கி குடுங்க, காசு கொடுத்து வாங்கி கொள்ள நாங்கள் தயார் என்று கலகலப்பாக பதிலளித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் கைத்தட்டலுடன் சிரிப்பலை நீடித்தது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *