ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – டொனால்டு டிரம்ப் கைது

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து இருந்தனர். அதோடு மட்டுமில்லாது அதற்கான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான பாலியல் உறவில் ஈடுபட்டது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனிடையே ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை டொனால்டு டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *