மே.19 பொள்ளாச்சி-ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை (மே.20) நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார். பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம்Continue Reading

கோவை வேளாண் பல்கலைக்கு அங்கீகாரம்

மே.12 கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ட்ரோன் மூலம் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்திறகு ஆளில்லா விமானம்‌ மூலம்‌ மருந்து தெளிக்கும் முறையில் காற்றின்‌ தன்மை குறித்து அளவீடு செய்யும்‌ அமைப்பிற்கான காப்புரிமை மத்திய காப்புரிமை ஒன்றியத்தால்‌ வழங்கப்பட்‌டுள்ளது. ஆளில்லா விமானம்‌ மூலம்‌ பயிர்களை தாக்கும்‌ நோய்‌, களை மற்றும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும்‌ முறை தற்சமயம்‌Continue Reading

மே.10 கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‌ 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராய்ச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்ட‌த்தில், அகில இந்திய அளவில் சுமார் 250க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்தContinue Reading

ஈ.ஆர்.ஈஸ்வரன் வேதனை

மே.1 தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டContinue Reading

ஏப்ரல்.27 உடுமலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ தக்காளி 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. உடுமலையில் 40Continue Reading

ஏப்ரல்.26 தமிழகத்தில் மே முதல் ஜூன் வரை அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ 32 ரூபாய் வரை விற்பனையாகும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம்Continue Reading

தொழிலாளர் நல மசோதா - நாளை ஆலோசனை

ஏப்ரல்.22 தாராபுரம் அருகே நல்லதங்காள் நீர் தேக்க அணைக்கு 720 ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து வரும் 13ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி,பொன்னிவாடி,எழுகாம்வலசு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 120 நபர்களிடம் நல்லதங்காள் அணை கட்டுவதற்கு சுமார் 720 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு நல்லதங்காள் அணைContinue Reading

தக்காளி செடிகள் அழிப்பு - விவசாயிகள் வேதனை

ஏப்ரல்.19 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுப் பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத அதிருப்தியில், செடிகளை அழிக்கும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். தற்போது, இந்த பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, விளைவித்த தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்துContinue Reading

தர்பூசணி சாகுபடி - விவசாயிகள் கவலை

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்திContinue Reading

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும்,Continue Reading