போக்சோ கைதி உயிரிழப்பு – கோவை மத்திய சிறையில் பரபரப்பு

ஏப்ரல்.19

கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி பேரூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த சிறை காவலர்கள், மாதேஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போக்சோ கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *