பந்தலூரில் தரைப்பாலம் சேதம் – கிராம மக்கள் தவிப்பு..!

மே.6

நீலகிரி மாவட்டம் கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் சேதடைந்தது. இதனால், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், அய்யன்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. இதனால், உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், செட்டிவயல் பகுதியில் வசிக்கும் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேதான் செல்ல வேண்டும். கனமழையால் தற்போது இந்த பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *