தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு – கோவையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்

மே.9

நாட்டின் மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை தடை செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் உட்பட 4 மொழிகளில் அண்மையில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் இந்தத் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். கோவையில் இந்த திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம், திரையரங்கு முற்றுகை உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின.

அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ள புர்கா, பர்ஹானா, தி கேரளா ஸ்டோரி உள்ளிட்ட படங்களை தடை செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் இஸ்லாமியப் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *