கோவை தண்டுமாரியம்மன் - சித்திரைத் திருவிழா

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா- பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை

ஏப்ரல்.22

கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

கோவையில் பிரசித்திபெற்ற அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு மகா கணபதி ஹோமம்,சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது. 300-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 30ம் தேதியுடன் நிறைவடையும் சித்திரை திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண உற்சவம், மஞ்சள் நீர்,சக்தி கரகம்,அக்னி தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *