தஞ்சையில் கேரளா சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து – சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

கேரளா மாநிலம் திருச்சூரிலிருந்து சுற்றுலா பேருந்தில் 51 பேர் வேளாங்கண்ணி குருத்தோலை விழாவில் பங்கேற்க சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்றபோது, சாலையின் வளைவில் உள்ள பக்கவாட்டு தடுப்பு சுவரில் மோதிய பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து உடனடியாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 40 பேர், மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 63 வயதான லில்லி என்ற பெண்ணும், 9 வயதான ரயான் என்ற சிறுவனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து ஒரத்தநாடு போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *