ஜிப்சம் கழிவுகள் விவகாரம் – ஸ்டெர்லைட் ஆலை மீது நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள கழிவுகளை நீக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகள் நீக்கப்படாமல் உள்ளதாகவும், அவை நீக்கப்படாவிட்டால் உபகரணங்கள் பாதிப்படையும் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.

 

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திய நாதன், “ஸ்டெர்லைட் ஆலையில் தேங்கியுள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்ற 5 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அகற்றவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கழிவுகளை மட்டும் நீக்க வேதாந்தா நிறுவனத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க வழங்கமுடியாது என திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *