கோவையில் பேருந்து சிறைபிடிக்கும் போராட்டம்

சிறுவாணி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை – கோவையில் நாளை கேரள பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம்..!

ஏப்ரல்.25

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து நாளை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள மாநில அரசை கண்டித்து வரும் 26ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுவாணி அணைக்கும் செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி அருகே கேரளா அரசு இரண்டு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கட்டப்பட்ட தடுப்பணையை அகற்ற கோரியும் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரை தடுக்கும் கேரள அரசை கண்டித்தும் போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் திமுக, விசிக, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ , மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அதன்படி, நாளை கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகளை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *