இந்தியா முழுவதும் கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கோவிட் காரணமாக 20 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தான் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின் வெள்ளிக்கிழமை அன்று அதே அளவு இறப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோன பரவல் அதிகரித்து இருப்பதை அடுத்து முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவும் பல இடங்களில் செயல்பாட்டு்க்கு வருகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவோரும் வந்து போவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் திங்கள் கிழமை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசு மருத்து வமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான தயார் நிலையை  ஆராய்வதறக்கான ஒத்திகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான பொது முடக்கம் கொண்டுவரப்பட்டது நினைவு கூறத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *