கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் – 8 ஆண்டுக்குப்பின் முதல் முறையாக பெண் ஓதுவர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவிலில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திலேயே முதல் முறையாக பெண் ஓதுவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வரும் பக்தர்களை தவிர வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்வதை வட மாநிலத்தவர்கள் இந்தக் கோயிலை புனித தலமாக கருதுகின்றனர். இதனால், கன்னியாகுமரி ஓதி அம்மன் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஓதுவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், பகவதி அம்மன் கோவிலுக்கு பெண் ஓதுவர் ஒருவரை இந்து சமய அறநிலைத்துறை நியமித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த பெண் பிரசன்ன தேவி என்பவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஒதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஓதுவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *