அரசு பங்களா சாவியை ஒப்படைத்த ராகுல் காந்தி…. உண்மையை பேச எந்த விலையையும் கொடுக்கத் தயார் என பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி காலி செய்தார்.

இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தி இன்று அரசு பங்களாவின் சாவியை மக்களவைச் செயலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித அவர், இந்த வீடு தனக்கு இந்திய மக்களால் வழங்கப்பட்டது என்றும், உண்மையைப் பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் சிறிது காலம் தங்கிவிட்டு வேறு வழியைக் கண்டுபிடிப்பேன் என குறிப்பிட்டார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *