அரசு கலைஅறிவியில் கல்லூரிகளில் இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை – இன்று கலந்தாய்வு தொடக்கம்.

மே.29

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் மாணவ-மாணவியர் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். இடங்கள் குறைவாகவும், விண்ணப்பங்கள் அதிகமாகவும் வந்துள்ளதா, இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில், மாணவ-மாணவியரின் விண்ணப்பங்களின் அடிப்படையில், தமிழ் மொழி பட்டப்படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்று முதல் நாளை மறுநாள் (மே.31) வரை சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதையடுத்து, ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *