அமைதியான தமிழ்நாட்டில் போலி வீடியோ பரப்பி அமைதியை சீர்குலைப்பதா? – உச்சநீதிமன்றம் கண்டனம்

“அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா?” – யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் எதை வேண்டுமானாலும் பரப்புவதா என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோக்கள் வெளியிட்ட விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரிய மணிஷ் காஷ்யப்பின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *