ஆகஸ்டு, 14- ‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவைContinue Reading

கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நீடிப்பதால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதி்க்கப்பட்டு உள்ளன எனவே இவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது பற்றி சேலம் மாவட்ட கிரஷர் சங்க செயலாளர்  ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது.. சேலம் மாவட்டத்தில் 75 கிரஷர் ஜல்லி குவாரிகள் உள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வேலைContinue Reading

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய  அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்திருக்கிறது. கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுContinue Reading

ஜூன்.5 தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக உலா வந்து மக்களை அச்சுறுத்திய அரிக்கொம்பன் யானை, சின்னமனூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தேனி மாவட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த ‘அரிக்கொம்பன்’ யானையைப் பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாகContinue Reading

மே.20 கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 நாட்களாக நடைபெற்றது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி,Continue Reading

மே.18 தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ள அனைத்து வனத்துறை பகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 2023 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று நேற்று காலை 6:00 மணியிலிருந்து மாலை 6:00Continue Reading

மே.9 கோவை வெள்ளியங்கிரி மலையின்‌ சுற்றுச்கழலை பாதுகாக்கும்‌ நோக்கத்தில்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படும்‌ வருடாந்திர தூய்மை‌ பணிகளில் சிவாங்கா பக்தர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் இந்திய கடற்படை அதிகாரிகளும்‌ இணைந்து தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபட்டனர்‌. கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை வரலாற்று சிறப்பும்,‌ ஆன்மீக முக்கியத்துவமும்‌ வாய்ந்தது. சிவனே வந்து அமர்ந்து சென்றதால்‌ இம்மலை தென்‌ கயிலாயம்‌ எனவும்‌Continue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக நடுக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.Continue Reading

ஏப்ரல்.25 கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பென்சில் முனையில் முகக்கவசத்தை செதுக்கியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை காந்திபார்க் பகுதியில் பென்சில் முனையில் முகக்கவசம் போன்ற சிற்பம் செதுக்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். ஆட்டோ ஓட்டுனரான இவர், கோவையில் கொரோனாContinue Reading

சென்னை மெரினா கடற்கரையி்ல் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தொடர்பான வழக்கை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்து விட்டது. இந்த வழக்கு மீது புதன் கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்களைContinue Reading