2,000 ரூபாய் நோட்டுக்களை இந்த தேதிக்குள் மாற்ற வேண்டும்… ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு, கெடு…

மே.19

2,000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்ற வேண்டும் என்று ரிசர்வு வங்கி கெடு விதித்து இருக்கிறது. அதற்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். பொது மக்கள் ஒரே சமயத்தில் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *