20 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

ஏப்ரல்.25

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *