10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

மே 17,2023

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இடஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியில் இருக்கக் கூடாது என்ற வாதத்தையும் முன்வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதனை விசாரித்த நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.

தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் விசிக, அகில இந்திய சமூக நீதி பேரவை  உள்ளிட்ட பலர் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *