பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி நிறுவன்ா ராமதாஸ் நடவடிக்கை எடு்தது உ்ளளா்ா.
மேலும் புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதனை ஏற்க மறுத்துள்ள பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாட்டாளி, மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவித்து உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
இதனிடையே நேற்று ராமதாஸ் அளித்த பேட்டிக்குப் பதில் நடவடிக்கையாக சென்னையை அடுத்த சோழிங்க நல்லூரி்ல் அன்புமணி இன்று பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். அப்பேோது அவர் பேசியதாவது…
பா.ம.க. யாருடைய தனிச்சொத்தும் இல்லை; அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
பொறுப்புகள் வரும், போகும். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். பொதுக்குழுவால் உங்களால் தலைவன் தேர்வு செய்யப்பட்டேன்.
அது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டோம்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நீங்கள்தான். இது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது.
என்னுடைய கடமை உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக வேலைசெய்வேன்.
பொறுப்புகள் வரும்; போகும். உங்கள் அன்புதான் நிரந்தரம்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.