‘வரதராஜ முதலியார்’ வரலாறுதான் நாயகன்’ படம் !
மணிரத்னமும் , கமலும் இணைந்து ‘மேஜிக்’ நடத்திய படம் ‘ நாயகன்’.
இந்த படத்தின் கதை குறித்து, சர்ர்சை உண்டு.இது ஆங்கிலப்படமான ‘காட்ஃபாதர்’ படத்தின் ரீமேக் என்று ஒரு தரப்பு சொல்லி வருகிறது,
இன்னொரு தரப்பு , மும்பையை கலக்கிய தமிழரான வரதராஜ முதலியார் வாழ்க்கை வரலாறுதான் நாயகன் என அடித்து சொல்கிறார்கள்.
இன்று வரை அந்த விவாதம் தொடர்கிறது. உண்மை என்ன ? நாயகன் படத்தை தயாரித்த முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் முக்தா ரவி உண்மை உடைக்கிறார்.
‘ எனது சகோதரர் முக்தா சுந்தர், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து காட்ஃபாதர் படத்தை தமிழில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினார். அந்த படத்துக்கு சிவாஜி, கமல், அமலா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
.இடையில், எங்களை சந்தித்த அனந்து, சிவாஜி நடித்தால் கமல்ஹாசனுக்கு செட் ஆகாது என்று சொன்னார். அதனால் சிவாஜி வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கமல்ஹாசனையும் வயதான தோற்றத்தில் நடிக்க வைக்க முடியாது. அதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்தோம்,
அந்த சமயத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கமல் விரும்பினார். அவரிடம் மணிரத்னம் வரதராஜ முதலியார் கதையை சொன்னார். கதையை கேட்ட எனது அப்பா முக்தா சீனிவாசன். சில காட்சிகளை கூடுதலாக சொன்னார். அதனை மணிரத்னம் ஏற்றுக்கொண்டார்.
அமலா திடீரென படத்தில் இருந்து ஒதுங்கி கொண்டார். அதன் பிறகு , அந்த கேரக்டரில் சரண்யா நடித்தார்,
நாயகன், வரதராஜ முதலியார் கதைதான். என்றாலும், கமல்ஹாசன். காட்ஃபாதர் படத்தில் வரும் டான் கேரக்டராகவே தன்னை நினைத்துக்கொண்டார். அதனால் தான் படத்தில் அவருக்கு டூயட் இல்லை. படமும் பெரிய வெற்றி பெற்றது’ என்று மனம் திறந்தார், முக்தா சீனிவாசன் மகன்.