10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கொளரவித்து வருகிறார்.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்றனர்.
3 – ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது –
“மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க”
“நீட் மட்டும் தான் உலகமா?படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு “
“வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?” பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள்”
“தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்; உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்; ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும்”
“ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான்; நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.