வெயில் மேலும் கொளுத்தும்..எச்சரிக்கை தேவை

ஏப்ரல்-14. தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்கள் வரை பகல் நேரம் வெப்பம் அதிகப்பட்சம் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பது வானிலை மையத்தின் தகவலாகும். இந்த வெப்பத்தைத் தணிக்க கோடை மழை எங்கும் பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே நடுப்பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *