விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்து உள்ள புகார் மனுவில் தன்னை பாலியல் ரீதியாக விக்கிரமன் துன்புறுத்தியதாகவும் ஜாதியின் பெயரைக் கூறி அவமதித்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தன்னை ஏமாற்றி 12 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் புகாரில் கிருபா முனுசாமி குறிப்பிட்டுள்ளார்.

விசிக கட்சி சார்பில் விக்கிரமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ள கிருபா, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  1. கிருபா முனுசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். நேஷனல் ஸ்காலர்ஷிப் ஸ்கீம் மூலமாக லண்டனில் வழக்கறிஞர் படிப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *