ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் கிடையாது… அவதூறு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி!

மோடி என்ற பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இடைக்கால நிவாரணம் வழங்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்ற போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். முதலில் சூரத் நீதிமன்றம், அதன்பிறகு குஜராத் உயர் நீதிமன்றம் என அடுத்தடுத்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார்.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இடைக்கால நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

கடைசியாக ஏப்ரல் 29ஆம் தேதி ராகுல் காந்தி வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைக்கும் போது, அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்களவை எம்.பி சீட்டை நிரந்தரமாக இழக்க நேரிடும். இது ராகுல் காந்திக்கும், அவர் சார்ந்த மக்களவை தொகுதிக்கும் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வாய் வழி அவதூறு என்பது இயற்கையிலேயே அவ்வளவு தீவிரமான குற்றச் செயல்பாடு அல்ல. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அதை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்காததால் எங்கள் தரப்பிற்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு எதிர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை புர்னேஷ் மோடியின் வழக்கறிஞர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *