ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் – பலத்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையம் வருகை

ஏப்ரல்.27

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு தேவைப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம், ரஷ்யாவிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷிய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது. அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறை பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிக்கோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். தற்பொழுது 45 பண்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *