மெரினாவில் பேனாசிலை அமைக்க எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுத் தாக்கல்..!

மே.24

சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க திர்ப்புத் தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக மற்றும் மீனவர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவரும் புதிய மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால், மெரினா கடலில் பேனா சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நாடு முழுவதும் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை அருகே மரங்களை நட வேண்டும் அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார். கடலில் பேனா சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்காக நிலுவையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *