தாராபுரம் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டி – அமெரிக்க சுற்றுலாவுக்குத் தேர்வான தாராபுரம் பள்ளி மாணவர்!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர் பசுபதி, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வாகியுள்ளார்.

சென்னையில் அண்மையில் மாநில அளவிலான இலக்கிய மன்றப்போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த போட்டிகளில், தாராபுரம் என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பசுபதியும் பங்கேற்றார். அதில், மாணவர் பசுபதி, பல்வேறு வகையான இலக்கிய மன்றப் போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வானார். இதன் காரணமாக மாணவர் பசுபதி, வரும் 28-ந் தேதி தமிழ்நாடு அரசு செலவில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார்.

இதைத் தொடர்ந்து, மாநில அளவில் சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டு, சாதனை படைத்துள்ள மாணவர் பசுபதியை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி தாராபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் மாணவர் பசுபதியைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்கத் நிஷா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும், 6வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முபாரக் அலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *