பொள்ளாச்சியில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி – ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இந்த ஆண்டுக்கான ரமலான் பண்டிகையை வரும் 21ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த மாதம் 31ம் தேதி முதல் இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் இன்பதுன்பங்களில் பங்கு பெற்று அவர்கள் பசியை போக்கி, வரியோர்க்கு உதவ வேண்டும் என்பது ரமலான் பண்டிகையின் நோக்கம்.

அந்த வகையில், பொள்ளாச்சியில் நல்விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். நல் விடியல் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முத்துபாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, கிராத் ஓதி சாகுல் அமீது உவைஸ் துவக்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *