புதிய பாஸ்போர்ட் பெற்ற ராகுல் காந்தி.. இன்று அமெரிக்காவுக்கு பயணம்..

May 29, 2023

ராகுல்காந்தி நேற்று தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று அவர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் அரசு பங்களாவையும் காலி செய்ய நேரிட்டது. அதன்பிறகு உடனே தனது சிறப்பு பாஸ்போர்ட்டையும் அவர் ஒப்படைத்தார். ஆனால் இன்று அவர் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததால், புதிதாக சாதாரண பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் தான் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால், தடையில்லா சான்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் புகார்தாரரான சுப்பிரமணிய சாமி, தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 10 ஆண்டுகளுக்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் அளிக்க தடையில்லா சான்று வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சாதாரண பாஸ்போர்ட் வந்து சேரும் என பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று பிற்பகலில் அவருக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. இதனௌயடுத்து இன்று மாலை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ராகுல் புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *