புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி..

May 28,2023

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார்.

தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகருடன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது.

அதேபோல் கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர். அப்போது செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஆசி பெற்றார்.

இதனைத்தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு, சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பங்கேற்றுள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *