பிரபல லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை..!!!

May 16,2023

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகிறது.

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தமிழில் பல முன்னணி திரைப்படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்து இயக்குனர் மணி ரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொருளாதார ரீதியிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. லைகா நிறுவனம் கத்தி, தர்பார், செக்கச் சிவந்த வானம், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இந்த நிறுவனம் தயாரித்தது. மேலும் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் லைக்கா நிறுவனத்தில் அமலாக்கதுறை சோதனை நடத்தியுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள லைக்கா நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல சென்னை அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 10 – க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஐந்திற்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *