பாஜக பட்டியலின மாநில நிர்வாகி படுகொலைக் கண்டனம் – கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

மே.3

சென்னையில் கடந்த 27ம் தேதி பாஜக பட்டியலின மாநிலப் பொறுப்பாளர் சங்கர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின மாநில பொருளாளர் சங்கர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட துணைத் தலைவர் மோகன்ராஜ் குமரன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரித்தி லட்சுமி, மூத்த தலைவர் கனக சபாபதி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாகவும் கூறி திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *