நெல்லை – கூடங்குளம் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

மே.8

நெல்லை கூடங்குளத்தில் பராமப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக 2வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் 2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

2-வது அணு உலையில் பராமரிப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் நிரப்பும் பணி இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது 1-வது அணு உலை மூலம் மட்டும் நாளொன்றுக்கு 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *